ஸ்ரீபதி பத்மநாபா குடும்பத்துக்கு உதவுவோம்.

ஸ்ரீபதி பத்மநாபா குடும்பத்துக்கு உதவுவோம். (*கவிஞர் மொழிபெயர்ப்பாளர், சிறுபத்திரிகையாளரான ஸ்ரீபதி பத்மநாபா சமீபத்தில் காலமானார். அவருடைய குடும்பத்திற்கு உதவும்படி கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து முன்வைக்கும் வேண்டுகோள் கீழே தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் இலக்கியப் பங்களிப்புக்கு நாம் செய்யும் பதில் மரியாதையாக அவருடைய குடும்பத்திற்கு முடிந்த நிதியுதவி செய்ய முன்வருவோம் – லதா ராமகிருஷ்ணன்)

அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. ’மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் உறவோ’ என்ற சு.ராவின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஒரு படைப்பாளியாக ஸ்ரீபதி நிகழாது போன அற்புதம். ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீபதியின் அறிவுக்கு அவர் எழுதியவை குறைவு. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இனி அதைப் பேசுவதில் பலனில்லை.

வாழ்வெனும் இப்பெருங்கனவை விட்டுச் செல்கிறவர்கள் ஒருவழியாக நிம்மதியாகப் போய்விடுகிறார்கள். ஆனால், அந்தப் பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு மனைவி என்றும் குழந்தை என்றும் வாய்க்க நேர்ந்த எளியவர்கள் நிலைதான் பரிதாபம். ஊழின் கொடுங்கரங்களில் இரக்கமற்று வழங்கப்படும் அந்த எளிய ஜீவன்களை காலம் போல் கருணையற்று நாமும் பார்த்துக்கொண்டிருக்க இயலாது அல்லவா? ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார்.

நன்கு படிக்கும் பெண்ணான பாரதி அன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார்.

இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.

கடந்த சனிக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் இதுவரை நூலாக்கம் பெறாத ஸ்ரீபதியின் படைப்புகளை அச்சாக்குவது மற்றும் ஸ்ரீபதியின் குடும்பத்துக்கு உதவுவது என்ற இரு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வேலைகளை எப்படித் திட்டமிட்டு முடிப்பது யார் யாரிடம் எல்லாம் உதவிகள் கேட்பது என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்கள் இந்த பதிவையே அழைப்பாக ஏற்று, இது தொடர்பான கருத்துகளைப் பதிவிடவும்… மேலும், ஸ்ரீபதிக்கான உதவித் தொகை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விரைவில் ஒரு தேதியில் ஸ்ரீபதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்றும் நண்பர்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பான வரவு செலவு விவரங்களை ஸ்ரீபதி குடும்பத்திடம் நிதி ஒப்படைத்த பிறகு, உடனடியாக தேதி வாரியாக வழங்கியவர்கள் பெயர் உட்பட இங்கு விரிவாகப் பதிகிறோம். ஸ்ரீபதி குடும்பத்துக்கு உதவ வேண்டியது நமது கடமை. நண்பர்கள் ஸ்ரீபதி மேலும் இலக்கியத்தில் மேலும் தங்களுக்கு உள்ள அன்பை தாராளமாகக் காட்டுங்கள்.

Continue Reading →

அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராது எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஊடகவியலாளன் ‘ எஸ்தி’! “ வீழ்வேனென்று நினைத்தாயோ? வீழ்ந்தாலும் எழுந்திருப்போம்! “ ஊடகத்திரு “ எஸ்தி 50 + “ மலர் தந்த மலரும் நினைவுகள்

அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு , நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “  எனத் தொடங்கும்  05-08-1999 ஆம் திகதி  எழுதப்பட்ட  ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது.  கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த  ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம். இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன். அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட  ஊடகத்திரு  ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற  2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.

‘ எஸ்தி 50 + ‘ மலர்,  எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது. கொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார். இச்சந்திப்புகளை பெரும்பாலும்  பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும்  சாந்திவிஹார் உணவுவிடுதியிலும்  தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார். இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி,  எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது!

பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். அவரையும் மறக்காமல்  ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர். ஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ஹரன்.

Continue Reading →

மனக்குறள் 9 & 10

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!

இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!

எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!

வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!

இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!

வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!

சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !

கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!

கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!

பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!

எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது

Continue Reading →

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்து என்ற
உயரிய அழகை யிட்ட
அம்பியே புலவ ரேறே
அகிலமே வியக்கும் மன்னா!
நெம்புகோல் பார திக்குப்
பின்னொரு கவிதை யூறும்
தம்பியாய் வருகை தந்தாய்
தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!

மழலையர் மகிழப் பாடி
மதுரமாம் இலக்கி யத்தின்
அழகென ஒலித்த அம்பி
அணித்தமிழ் மரபின் நம்பி
உழவெனப் பாக்கள் இட்டு
உயிரெனக் கவித்தேன் வைத்தே
விழுமியம் படைத்த பாகன்
விளைநிலம் எழுதக் கண்டோம்!

Continue Reading →