
‘காக்கைதீவுக் கொக்கு’ என்னும் தலைப்பில் அவர் பதிவு செய்திருந்த இப்புகைப்படம் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது. இது பற்றி என் எதிர்வினையினைப்பின்வருமாறு பதிவு செய்திருந்தேன்:
“நண்பரே, கல்லுண்டாய் வெளி , நவாலி மண் கும்பி, காக்கைதீவுக் கடற்கரை, அராலிப் பாலம் போன்றவற்றையும் உள்ளடக்கிய புகைப்படங்கள் இருந்தாலும் பகிர்ந்துகொள்ளவும். ஒரு காலத்தில் காலையும், மாலையும் அப்பிரதேசத்து அழகைப்பருகி மெய்ம்மறதிருந்தவன். இப்புகைப்படம் அந்நினைவுகளை மீண்டும் படம் விரிக்க வைக்கின்றன.”
அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
“நண்பா, நீங்கள் கேட்கும் இடங்களெல்லாம் முன்புபோல அல்ல. பிளாஸ்டிக் மற்றும் நச்சுக் கழிவுகளின் குப்பைத் திடல்களாக உள்ளன.
அராலி வயல்வெளிகளெல்லாம் விதைக்கப்படாத நிலங்களாக மட்டுமல்ல, பொலித்தீன் குப்பைகளால் நிறைந்து போயுள்ளன.”
11-தொல்நூல் மரபு
என்மனார் என்று எழுதித்தொல் காப்பியர்
முன்னிருப் பிட்டதே எண்!
எழுத்துசொல் இன்பொருள் யாப்பணி ஐந்தும்
எழுத்தொடும் நூற்பா இயல்
இரண்டரைநூற் றாண்டு இலக்கணப் பல்நூல்
இருந்தன முற்சங்கம் முன் !
தீயாலும் நீராலும் தூர்ந்தன போகவும்
எண்கீழும் மேலென் றிலங்க !
நீதிநூல் ஐம்பொரும் காப்பியம் மேல்கீழ்உம்
மீதியாம் சங்கம் மொழி !
மதுரைத் தமிழார் மலர்ந்தநற் சங்கம்
நிலந்தரு திருவாம் திடல்!
நாற்பத்து ஒன்பது நற்றாம் புலவரின்;
நோற்பின் உதயமே சங்கம் !
வயலும் வரம்பாய் வளரிலக் கியத்தும்
முயலும் இலக்கண மென்ப !
மரபா லுயர்ந்த மகவுகளைக் கூறும்
தெரிசொல் தமிழின் சிறப்பு !
வடவேங்க டத்தும் குமரிவரை யாகி
அடங்கும் தமிழர்நிலம் அன்று!
இலக்கிய அமுதம் <iobram253@gmail.com>
venkat_swaminathan_new_a
Copyright © 2025 இரவி — Primer WordPress theme by GoDaddy