மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!தமிழாராய்ச்சிக்கென உலகப்பொது நிறுவனம் அமைத்தவர் அமரர் தனிநாயகம் அடிகளார் எனச்சொல்வோம்.   இன்னலுற்ற தமிழ் சமூகத்திற்காக அயராது பாடுபட்டவர்கள் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எனச்சொன்னால் அது  அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களையே குறிக்கும். கடந்த 11   ஆம் திகதி மாலை கொழும்பில் மறைந்தார் என்ற துயரச்செய்தி வந்தது. இலங்கை வடபுலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை முன்னெடுத்துவந்தவர். அதேசமயம், தான் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் நலன்கள் குறித்து அக்கறையோடு செயற்பட்டவர். இலங்கையில் தமிழ் சமூகத்திற்கும்  தமிழர்தம் உரிமைக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின்  வாழ்வாதாரத்திற்கும் சமூக நீதிக்கும் இனங்களின் நல்லிணக்கத்திற்கும் அயராமல் பாடுபட்டவர்களின் வரிசையில் பல கத்தோலிக்க அருட்தந்தைகளை நாம் காணமுடியும். தவத்திரு தனிநாயகம், மேரி பஸ்டியன், ஆபரணம் சிங்கராயர், அன்டனி ஜோன் அழகரசன், சந்திரா பெர்ணான்டோ உட்பட பலரை நாம் இனம்காண்பிக்கமுடியும். எனினும் இவர்களைப்பற்றி இதுவரையில் முழுமையாக எவரும் ஆவணப்படுத்தவில்லை. தனிநாயகம் அடிகளார் குறித்து பல நூல்களும் ஆவணப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கையில் மக்கள் சேவையே மகேசன் சேவையென வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர். இவர் குருத்துவப்பட்டம் பெற்று 49 ஆண்டுகளாகின்றன. பொன்விழா ஆண்டை நெருங்கும் வேளையில் விடைபெற்றுவிட்டார்.

போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் முல்லைத்தீவு   வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் ஒருவர். அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரின் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் புகலிடம் பெற்று வசிக்கின்றனர். அவர் நினைத்திருந்தால், அந்த போர் நெருக்குவாரத்திலிருந்து விடுபட்டு, தமது உறவுகள் வாழும் தேசங்களிற்கு வந்து இங்கிருக்கும் தேவாலயங்களில் ஆன்மீகப்பணியை தொடர்ந்திருக்கமுடியும். அவர் தமிழர் புகலிட நாடுகளுக்கு வந்தார். ஆனால், நிரந்தரமாக தங்குவதற்கு வரவில்லை. அவர் மெல்பனுக்கு வரும் சந்தர்ப்பங்களில் மக்களை சந்தித்து, தனது பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளையே சேகரித்து எடுத்துச்சென்று வழங்கினார்.

2004 ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் ஊடாகவே நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தோம். அவர் மெல்பன் வந்த சந்தர்ப்பங்களிலும் சுனாமி வந்த காலத்தில் கொழும்பில் அவர் தங்கியிருந்த குருமனையிலும் சந்தித்து பேசியிருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகளே அவரது பேசுபொருளாகவிருக்கும். அவர்  புனித இறைபணிக்கு அப்பால்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் குறித்தே சிந்தித்தார்.

இவரது தங்கை ஜெஸியை மணந்தவரான மெல்பனில் வதியும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்,  அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் குறித்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Continue Reading →