(நாட்டுப்புறக்) கவிதை : “ராசாவே உனை நாடி….”

ஶ்ரீராம் விக்னேஷ்

(அவள்)
பாவை என்   முகம்  நோக்கிப்,
பதில் தருவாய்  என  எண்ணி,
பக்கம் நான்  வந்தேனே….!
வெக்கத்தை மறந்தேனே….!!
பார்வை கொஞ்சம்  கீழிறங்கிப்,
பார்ப்பதிலே என்ன விந்தை?
மாராப்பு சேலையிலே,
மர்மம்  என்ன  தெரிகிறது…?

(அவன்)
மாராப்பு தெரியவில்லை….
மச்சமும் தெரியவில்லை….!
மாராப்புக் குள்ளேயுன்,
மனசு தெரியிதடி….!
மனசுக்குள்ளே பரந்திருக்கும்,
மகிமை தெரியிதடி….!

Continue Reading →